சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முழுமையாக ஆய்வு செய்தபின் எடுத்த முடிவு என சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும், யாருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.