×

காங்கிரசுக்கு கைகொடுத்த கமல்ஹாசன்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிக்கு உதவுவோம் என ம.நீ.ம. அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தையற்ற ஆதரவு தெரிவித்துள்ள   மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர் சந்திபில்  பேசிய அவர் செயற்குழுவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிப்பது என தீர்மானம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறினார்.

இந்தியாவின் பன்முகத்துவம் இறையாண்மையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது என அவர் தெரிவித்தார்.  ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றி பெற செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என அவர் தெரிவித்தார். சமத்துவம், சகோதரத்துவ, சமூக நீதியின் மண் தமிழ்நாடு என மக்கள் நீதி மய்யம் தலைவர்  தெரிவித்துள்ளார்.

பின்னர், மக்கள் நீதி மய்யம் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிப்பது என்பது பரந்த நோக்கம். தேசத்துக்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நான் ஏன் போட்டியிட கூடாது? என்றும், மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.


Tags : Kamal Haasan ,Congress ,DMK ,EVKS ,Ilangovan ,M.N.M. , Erode, East, Election, Congress, Support, M.N.M., Kamal Haasan
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...