சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிப்பது என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.