தூத்துக்குடி: கோவில்பட்டியில் மின்கம்பம் மாற்றியமைக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் பொன்ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். நாலாட்டின்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் பொன்ராஜா கைது செய்யப்பட்டார். கோவில்பட்டியை சேர்ந்த பாரதிசங்கர் என்பவரிடம் லஞ்சம் வாங்கியபோது பொன்ராஜாவை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.