×

விராலிமலையில் 10 ஆண்டுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா: 10-கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து மக்கள் பங்கேற்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் மீன்களை பிடித்தனர். விராலிமலை மேலபச்சாக்குடி பெரியடம் பகுதியில்  10 ஆண்டுக்கு பிறகு இன்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக மீன்பிடி திருவிழாவுக்காக குவிந்தனர்.

அவர்கள் தங்களுடன் கொண்டுவந்த வலை, கட்சா, கூடை  ,பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். குளத்தில் நீர் வற்றி இருந்ததால் வலையில் விறால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின.அவற்றை ஆர்வமுடன் பிடித்த மக்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றன.


Tags : Viralimalaya , விராலிமலை, 10 ஆண்டு, மீன்பிடி திருவிழா, மக்கள் பங்கேற்பு
× RELATED ஆடி மாதத்தையொட்டி விராலிமலையில்...