×

சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா நபர் கைது

தண்டையார்பேட்டை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை ஒன்பதாவது நடைமேடையில் பூரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது ஆய்வாளர் சசிகலா தலைமையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது.

காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரபி நாயக் (34) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடத்திய பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Chennai , Odisha man arrested for smuggling ganja in express train to Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...