×

தொண்டர்கள் பலம் எங்க பக்கம்னு சொல்றவங்க பாஜ வாசல்ல நிக்குறாங்க... சசிகலா கிண்டல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சுந்தரக் கோட்டையில் நேற்று சசிகலா அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவினர் பிரிந்து தனித்தனியே போட்டியிட முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. தொண்டர்களின் பலம் தங்களுக்கு இருப்பதாக சொல்லி கொள்பவர்கள் இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு பாஜக அலுவலக வாசலில் நிற்பது வேடிக்கையாக இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை முடக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் அது எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இரட்டை இலை சின்னத்தை எந்த காலத்திலும், யாராலும் முடக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நம்மை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது. பிரிந்து கிடக்கும் அதிமுக, வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஒன்றிணையும். அதற்கான பணிகளை நான் தீவிரமாக எடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sasikala , Sasikala teases those who say where the strength of the volunteers is not at the door of the party...
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!