சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஓமலூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனையில் எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ் பங்கேற்றுள்ளனர்.