×

மாமல்லபுரத்தில் சீரமைப்பு பணி தீவிரம்

மாமல்லபுரம்: ஜி20 மாநாடு எதிரொலியாக, மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாக நடைபாதை சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதற்காக, 20 நாட்டு பிரதிநிதிகள் வரும் 30ந்தேதி சென்னை வருகின்றனர். மேலும் ஜி20 பிரதிநிதிகள் அடுத்த மாதம் பிப்ரவரி 1ம்தேதி மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிடுகின்றனர்.

இதற்காக, வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்க  புல் தரை அமைப்பது, புராதன சின்னங்களை கெமிக்கல் மூலம் தூய்மை படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை  தொல்லியல் துறை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அந்தவகையில், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் சேதமடைந்த நடைபாதைகளை சிமென்ட் கலவைகள் மூலம் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Mamallapuram , Intensification of renovation work at Mamallapuram
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...