சென்னை: ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்தும் உத்தரவை எதிர்த்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. எல்லா மத நம்பிக்கையையும் பாதுகாத்து தமிழகம் அமைதி பூங்காவாக நீடிக்கவே விரும்புகிறோம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.