×

குமரியில் ரயில் மோதி 2 பேர் பரிதாப பலி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நேற்றிரவு சடலமாக கிடந்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இறந்தவர், குமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த கொத்தனார் பால்ராஜ் (41) என தெரியவந்தது. ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதே போல் குமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார்.

தகவலறிந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் இறந்தவர் கேரள மாநிலம் காயக்கரை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பிரபு (33) என தெரிய வந்தது. இவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் அல்லது ரயில் மோதி பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். பிரபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Kumari , 2 killed in train collision in Kumari
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...