×

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகா மாறுபாட்டால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-33 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் இரவில் உறைபனி நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.  

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


Tags : Tamil Nadu ,Meteorological Department , Tamil Nadu, Moderate, Rain, Chance, Weather, Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...