×

நாகர்கோவிலில் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பாட்டம்: 400 பேர் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தல்

நாகர்கோவில்:நாகர்கோவிலில் கண்களை கட்டிக்கொண்டு 400 பேர் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். நாகர்கோவிலை அடுத்த அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளள கல்லூரி மைதானத்தில் நடந்த சிலம்பம் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சிலம்பம் நிகழ்வில் சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த சிலம்பம் சுற்றும் நிகழ்வில் வயது வித்தியாசமின்றி 400 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை நிகழ்த்தினர். பின்னர், இருபுறமும் நெருப்பு மூட்டப்பட்ட நிலையில் 6 வயது சிறுவன் கண்களை காட்டியபடி 100மீட்டர் தூரத்துக்கு டைவ் அடித்தான். அந்த நிகழ்வு அங்கு காணவந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.   


Tags : Nagercoil , In Nagercoil, a, bell, cymbal, oddity
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...