புதுக்கோட்டை: எப்போதும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி அளித்துள்ளார். இடைத்தேர்தலில் வென்றாக வேண்டும் என்ற நோக்கில், அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். பெரிய கட்சி என்பதால் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.