போபால்: இயற்கையாகவே யானைகளுக்கு தேனீக்கள் என்றால் அச்சம் இதனால், யானைகள் வரும் இடங்களில் தேனீக்கள் அடங்கிய பெட்டிகளை வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்பதால் இந்த யுக்தியை மத்தியபிரதேச அரசு கையாள திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மத்தியபிரதேசத்தில் கணிசமாக பழங்குடியின் மக்கள் அதிகம் வசிக்கும் சித்தி, சிங்ராலி, உமாரியா, அனுப்பூர், திண்டோரி, ஷாஹ்டோல், மண்டாலா ஆகிய பகுதிகளில் தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்படும். இதனால் யானைகளிடம் இருந்து மனிதனையும், பொருட்களையும் பாதுகாக்க முடியும். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமும் பெருகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.