×

மொழிப்போர் தியாகிகளுக்கு வரும் 25ம் தேதி அஞ்சலி செலுத்த வேண்டும்: கட்சியினருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு வரும் 25ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் அஞ்சலி செலுத்த வேண்டுமென மாவட்டசெயலாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை: இந்திமொழி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது தாய் மொழியாம், தமிழ் மொழியை காக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜன. 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களை நினைவுக்கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுகவின் சார்பில் வரும் 25ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மொழிப்போர் தியாகிகளின்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : OPS , Language war martyrs should be paid tribute on 25th: OPS appeals to party members
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்