சென்னை: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த 14ம் தேதி அனல் மின்நிலையத்தின் முதலாவது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாய் கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவுகள் சரிசெய்யப்பட்டு, நேற்று காலை முதல் மீண்டும் முதல் அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.