×

நாங்களே அதிமுக என்று ஓபிஎஸ் சொல்லமுடியாது, சட்ட ரீதியாகவும் அது தவறு: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஈரோடு: இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் அவர்களை, அவரது இல்லத்தில் முன்னாள் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக தலைவர்கள் கூட்டம் நடைபெற்று நிறைவடைந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது, ஓபிஎஸ் குஜராத் சென்றது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள்.

இந்தியா ஒரு சுதந்திர நாடு. அவர் குஜராத், பீகார், ஒடிசா என எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அது பற்றி கவலை கிடையாது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதோடு, சிறப்பாக அதிமுக செயல்பட்டு வரும் நிலையில், நாங்களே அதிமுக என்று ஓபிஎஸ் சொல்லமுடியாது. சட்ட ரீதியாகவும் அது தவறு. ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால், அவரை ஒரு சுயேட்சை வேட்பாளராகவே மக்கள் கருதுவார்கள். இந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். எவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : OPS ,Jayakumar ,Minister , OPS cannot say we are AIADMK, it is also wrong legally: Former AIADMK minister Jayakumar interview
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...