நெல்லை: பாளை. மத்திய சிறையில் நேற்று காலை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள பெரிய சிறைச்சாலைகளில் பாளை. மத்திய சிறை முக்கியத்துவம் வாய்ந்தது. விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1200க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்(கிழக்கு) சீனிவாசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கைதிகள் அடைக்கப்படும் அறைகள், உணவு தயாரிப்பு கூடம், சேமிப்பு கிடங்கு மற்றும் சிறைச்சாலையின் உள்பகுதி மைதானம் என பல்வேறு இடங்களில் இந்த சோதனை ஒன்றரை மணி நேரம் வரை நீடித்தது. அப்போது தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.