சென்னை: தனியார் நிறுவனங்களின் பால் விலை உயராமல் இருக்க, ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவரது அறிக்கை: பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஆகியவற்றை காரணம் காட்டி பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக, அரசு நிறுவனமான ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கவேண்டும். குறிப்பாக ஆவின் கடை திறந்திருக்கும் போது பால் தட்டுப்பாடில்லாமல் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு, அத்தியாவசிய, அவசிய தேவையாக இருக்கின்ற பாலின் விலை உயராமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.