புதுடெல்லி: அந்தமான் நிகோபாரில் உள்ள தீவுகளில் இதுவரை பெயரிடப்படாமல் உள்ள 21 பெரிய தீவுகள் புதிதாக பெயர்சூட்டப்பட உள்ளன. நாளை நடக்கும் விழாவில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொள்கிறார். விழாவில் இந்த தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும்.