×

மத்திய பிரதேச அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருந்த சடலத்தின் கண்கள் மாயம்: எலிகள் தோண்டி தின்றுவிட்டதாக பகீர் தகவல்

சாகர்: மத்திய பிரதேச அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை எலிகள் கடித்து தின்றுவிட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை காணவில்லை என்ற புகார் வந்துள்ளது. மாயமான கண்களை எலிகள் தோண்டி எடுத்து சாப்பிட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை எலிகள் கடித்து தின்ற சம்பவம் நடந்துள்ளது. அதனால் மீண்டும் அதே மருத்துவமனையில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனை அதிகாரியான ஆம்எம்ஓ டாக்டர் அபிஷேக் தாக்குர் கூறுகையில், ‘பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை, எலிகள் தின்றிருக்க வாய்ப்புள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகுதான் எலிகள் சடலத்தின் கண்களை தின்றதா? என்பதை உறுதிப்படுத்த முடியும். மேலும் பிணவறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்’ என்றார்.



Tags : Madhya Pradesh Government Hospital ,Bhagir , Eyes of dead body in Madhya Pradesh Govt Hospital mortuary missing: Bagheer informed that rats had dug it up and eaten it
× RELATED அதிமுகவை உடைப்போம் ஈடி ரெய்டு...