×

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்: இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் வேட்பாளருக்கே ஆதரவு.. ஜான் பாண்டியன் பேட்டி

சென்னை: இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் வேட்பாளருக்கே ஆதரவு தரப்போவதாக ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியனுடன் பழனிசாமி அணியினர் சந்தித்து பேசினர். கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் ஜான்பாண்டியனுடன் சந்தித்து பேசினர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு ஜான்பாண்டியனுடன் சந்திப்பு நடைபெற்றது.

பழனிசாமி தரப்பு நிர்வாகிகளுடனான சந்திப்புக்கு பின் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பழனிசாமி, பன்னீர்செல்வம் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இன்று மாலை என்னை சந்திக்க வரும் ஓ.பன்னீர்செல்வத்திடம் அணிகள் இணைப்பை வலியுறுத்துவேன் என ஜான் பாண்டியன் கூறினார். இரட்டை இலை சின்னம் வைத்திருப்பவர்களை ஆதரிப்பதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தெளிவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Tags : OPS ,EPS ,John Pandian , OPS, EPS should unite, double leaf symbol, support for the candidate, John Pandian Interview
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்