×

சென்னையில் ஆமைகளை பாதுகாக்க மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க ரூ.6.30 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆமைகள் காப்பகம், மறுவாழ்வு மையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் ஆமைகள் காப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆலிவ் ரிட்லி, கிரீன், லெதர்பேக், ஹாவ்க்ஸ்பில், லோகர்ஹெட் உள்ளிட்ட கடல் ஆமை இனங்களை பெருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கடல் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து, குஞ்சு பொரித்து கடலில் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Tags : Government of Tamil Nadu ,Chennai , Tamil Nadu, Tortoise Sanctuary, Government
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...