×

மாதவரம் புறநகர பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை புறநகர பேருந்து நிலையங்களில் ஒன்றான மாதவரம் புற நகர பேருந்து நிலையத்தில் இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு பேருந்து நிலைய வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் புதிய பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே சென்னை கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் புதியபேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. செங்கற்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் நிறைவு பெறும் வகையிலும், திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மாதவரம் புறநகர பேருந்து நிலையத்தை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு பேருந்து நிலைய வளாகம் மற்றும் கழிவறைகளை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மைச் செயல் அலுவலர் எம். லட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Minister ,Shekharbabu ,Madhavaram , Minister Shekharbabu inspects Madhavaram suburban bus station
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...