சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.