சென்னை: தனியார் நிறுவன பால் விலை உயர்வை கட்டுப்படுத்த ஆவின் பால் விற்பனையை அரசு அதிகரிக்க வேண்டும் என வாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விற்பனை தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தனியார் நிறுவன பால் பொருட்கள் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் வாசன் கூறியுள்ளார்.