கீழக்கரை: கீழக்கரையில் குப்பைகள் சேருமிடமாக மாறியுள்ள பொதுக்கிணற்றினை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையில் 7வது வார்டுக்குட்பட்ட வடக்கு தெரு மணல்மேடு அருகில் ஒரு பொதுக்கிணறு அமைந்துள்ளது. பயன்பாடின்றி கிடக்கும் இந்த கிணற்றில் தற்போது அதிக அளவில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதோடு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் உருவாகும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் வீடு, வீடாக சென்று குப்பைகள் ேசகரிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வராததால் பொதுமக்கள் வீதிக்கு சென்று குப்பையை கொட்டும் நிலை இருந்து வருகிறது.