ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானித் திட்ட ஆயக்கட்டுப் பூமிகளுக்கு இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாகவும் 21.01.2023 காலை 8.00 மணி முதல் 01.05.2023 காலை 8.00 மணி வரை திறப்பு மற்றும் நிறுத்தம் முறையில் 12000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.