சென்னை: சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்குப்பகுதி திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நாளை மாலை 6 மணியளவில் போரூர் காரம்பாக்கத்தில் உள்ள நவரத்தினம் ஜெயின் திடலில் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக செயலாளரும் மதுரவாயல் எம்எல்ஏவுமான காரம்பாக்கம் க.கணபதி தலைமையில் நடக்கிறது.
நொளம்பூர் வே.ராஜன், ஆலப்பாக்கம் கு.சண்முகம், அயப்பாக்கம் துரை வீரமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, 10,100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். கூட்டத்தில், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் பேசுகின்றனர்.
எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணைமேயர் மு.மகேஷ்குமார், க.தனசேகரன், காசி முத்து மாணிக்கம், பாலவாக்கம் க.சோமு, வேளச்சேரி மணிமாறன், எஸ்.குணசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் பாலவாக்கம் விஸ்வநாதன், மு.மனோகரன், வாசுகி பாண்டியன், எஸ்.பாஸ்கரன் மற்றும் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் க.கணபதி மற்றும் மதுரவாயல் பகுதி திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.