×

ராமநாதபுரம் தொண்டியில் உள்ள ஜெட்டி பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: ராமநாதபுரம் தொண்டியில் உள்ள ஜெட்டி பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. தொண்டி ஜெட்டி பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க மாவட்ட எஸ்.பி.க்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. பாலத்தின் சேத விவரம் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. பாலத்தின் நுழைவாயிலில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : iCort Branch ,Jetty Bridge ,Ramanathapuram Thonti , Thondi, Jetty Bridge, Ban, Icourt Branch
× RELATED உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு...