மதுரை: மதுரை, திருச்சி, தஞ்சை அரசு மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வியியல் துறை இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. புற்றுநோய், எச்.ஐ.வி., நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணி மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.