சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள், போலீசார் பங்கேற்றுள்ளனர்.