புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் சிபிசிஐடி போலீசார் 5வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்று தரப்பை சேர்ந்த 45 நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான 10 குழுக்களை சேர்ந்த 35 போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.