×

சென்னை பல்லாவரம் அருகே திரிசூலத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கூலித் தொழிலாளி காலில் காயம்..!

சென்னை: சென்னை திரிசூலம் அருகே கட்டட வேலையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் துப்பாக்கி தோட்டா பட்டு காயமடைந்தார். திரிசூலம் பெரியார் நகரில் சங்கர் என்பவர் வீட்டில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இதனிடையே திரிசூலம் மலைப்பகுதியில் சிஐஎஸ்எப் வீரர்கள் அனுமதி பெற்று துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது 2வது தளத்தில் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி இன்சர் அஸ்லம் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு ஒன்று திசை மாறி 2 கி.மீ. தூரம் கடந்து கூலி தொழிலாளி காலில் பாய்ந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த இன்சர் அஸ்லம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார், சிஐஎஸ்எப் வீரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Trisulam ,Chennai Pallavaram , A laborer's leg was injured in a bullet incident in Trisula near Chennai's Pallavaram..!
× RELATED குடியிருப்புகளுக்கு பத்திரப்பதிவு...