கோவை: கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல வனத்துறை சார்பில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டதாக வானவர் ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டார். வனவர் ராஜேஷ்குமாரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டுகளை வழங்க கொடுக்கப்பட்ட இயந்திரத்தை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது.