×

தமிழர் பிரச்னை தீர்க்கப்படும்: இலங்கை அதிபர் ரணில் உறுதி

கொழும்பு: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் 100வது ஆண்டு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை அரசு ஏற்கனவே தமிழ் சமூகத்தினருடன் பேசி அவர்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல்  மலையகத்திலுள்ள தமிழ்ர்களுடனும் பேச உள்ளோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆவது ஆண்டை எதிர்கொள்கிறோம். இப்போது நல்லிணக்கம் மற்றும் சமூகவாழ்வுக்கான நேரம் என்று நான் நினைக்கிறேன். எனவே  இப்போது தமிழர்கள் பிரச்னை பற்றி பேசத்தொடங்கி இருக்கிறோம். இதே போல் சிறுபான்மை சமூக பிரச்னை பற்றியும் பேசி தீர்க்கப்படும். இதன் மூலம் சமூக நீதி மேலோங்கட்டும். இன நல்லிணக்கம் மேலோங்கட்டும். மேலும் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : President ,Ranil , Tamil problem will be solved: Sri Lankan President Ranil assured
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...