×

இன்ஸ்டகிராமில் பழகிய இளம்பெண் மாயம்

கோவை: கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் பகுதி சேர்ந்த 19 வயது இளம் பெண் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு அறிமுகமான வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசியதாக தெரிகிறது. பொங்கல்  தினத்தன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய வாலிபர், இளம்பெண்ணின் தாயிடம்  பேச வேண்டும் என கேட்டுள்ளார். இளம்பெண் தனது தாயிடம் செல்போன் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாலிபர் உங்களது பெண்ணை காதலிப்பதாகவும்  திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதற்கு இளம் பெண்ணின் தாய் மறுத்து விட்டார்.  

இந்நிலையில் நேற்று இளம் பெண் துணி கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றார். மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இன்ஸ்டாகிராம் மோகத்தில் பழகிய வாலிபருடன் அவர் மாயமாகி விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோவை ராமநாதபுரம் மரத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி  வீட்டில் இருந்த இளம்பெண் மாயமாகிவிட்டார்.

பின்னர் ஒரு நாளில் இவர்  மீட்கப்பட்டார்.   இந்நிலையில் நேற்று மீண்டும் இவர் செல்போனில் தீவிரமாக  பேசி வந்துள்ளார். அவரது பெற்றோர் செல்போனில் நீண்ட நேரம் பேசக்கூடாது என எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் இளம்பெண் மறுபடியும்  வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். இதுதொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் சண்முகம்  ரோடு பகுதியை சேர்ந்த 20 வயதான கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும்  மாணவி சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Mayam, a young girl familiar with Instagram
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை