அரியலூர்: செந்துறை அருகே ஆர்ப்பாட்டம் செய்யவிருந்த லாரி ஓட்டுநர்கள், குடும்பத்தினர் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கோரி ஆலத்தியூர் சிமெண்ட்ஆலை சுரங்க ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சுரங்கம் அருகே குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.