சென்னை: இலங்கைக்கு நிபந்தனை இல்லாமல் கடன் வழங்கவோ, கடன் வழங்குவதற்கு ஆதரவளிப்பதோ கூடாது என்று அன்புமணி தெரிவித்தார். ஈழத்தமிழர் சிக்கலை தீர்க்க நிபந்தனைகளை இந்தியா விதிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இலங்கை அதிபரை சந்திக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவுவாதங்களை பெறவேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.