கடலூர்: கடலூரில் பேனர் வைக்க அனுமதி மறுத்ததால் போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதம் ஏற்பட்டது. கடலூரில் நாளை பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது. கடலூர் நகரில் முக்கிய பகுதிகளில் பாஜகவினர் பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது என கடலூர் மாநகராட்சி ஊழியர்கள் போலீசாருடன் வந்து தடுத்ததால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.