×

மண்டபம் தென்கடலில் தடை வலையில் பிடித்த 2 டன் மீன்கள் பறிமுதல்

ராமநாதபுரம்: மண்டபம் தென்கடலில் தடை வலை மூலம் பிடித்து வரப்பட்ட 2 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், பாம்பன் தென் கடலில் இருந்து 264 விசைப்படகுகள் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு சென்றன. இரவு 10 மணியளவில் ஒரு சில படகுகள் சட்ட விரோத மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளதாக மீன்வளத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மண்டபம் இந்திய கடலோர காவல் படையின், கடலோர அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் குமரவேல், கடல்வள மேற்பார்வையாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் ரோந்து சென்றனர்.

பின்னர், நேற்று அதிகாலை கரை திரும்பிய விசைப்படகுகளிலும் சோதனை செய்தனர். இதில் மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த 8 படகுகள் தடை செய்யப்பட்ட வலையால் மீன்களை பிடித்து வந்தது தெரிந்தது. அப்படகுகளில் இருந்த 2 டன் மீன்களை பறிமுதல் செய்தனர். மீனவர்கள், படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத்துறை துணை இயக்குநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.




Tags : Mandapam ,South Sea , Mandapam South Sea, barrier net, 2 tons of fish, confiscation
× RELATED நீர்நிலையை பாதுகாத்திட கருவேல மரத்தை அகற்ற கோரிக்கை