×

வாலிபரை தாக்கிய 3 பேர் புழல் சிறையில் அடைப்பு

பெரம்பூர்: வியாசர்பாடி ஜான் கென்னடி முதல் தெருவை சேர்ந்தவர் கரண் (24). இவர், வண்ணாரப்பேட்டையில் உள்ள கண்ணாடி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு, வியாசர்பாடி ஜான் கென்னடி முதல் தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த 3 பேர், கரணை அழைத்து வீண் தகராறு செய்து கட்டை மற்றும் ஓட்டால் பலமாக தாக்கினர். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர், கொடுத்த புகாரின்பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, வியாசர்பாடி பள்ளத்தெரு பகுதியை சேர்ந்த பாலாஜி (26), ஆகாஷ் (23), அஜித்குமார் (20) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Puzhal Jail , 3 people who assaulted the teenager are locked up in Puzhal Jail
× RELATED புழல் சிறையில் கைதிகளை சந்திக்க...