×

ஜீவானந்தம் நினைவுதினம் நல்லகண்ணு, முத்தரசன் மலர்தூவி மரியாதை

தண்டையார்பேட்டை: காசிமேட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவரத்தினம் நினைவு நாளை முன்னிட்டு, மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜீவானந்தத்தின் 60வது நினைவு நாளை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை காசிமேடு எண்ணூர் விரைவு சாலையில் உள்ள ஜீவானந்தம் நினைவிடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, ஜீவாவின் கொள்கை குறித்து பேசினர். அதை தொடர்ந்து, தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஜீவா பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் நல்லகண்ணு, முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வின்போது, மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், உதயகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jeevanandam memorial ,Nallakannu ,Mudharasan , Jeevanandam memorial day Nallakannu, Mudharasan floral tribute
× RELATED மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக...