×

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த லோடு ஆட்டோ மீது அரசு பஸ் மோதி 2 பேர் பலி

*3 காளைகள் உயிரிழப்பு

ஆலங்குடி : புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த லோடு ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் 3 காளைகள் உயிரிழந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட 3காளைகளை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மணப்பாறைக்கு சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை விக்கி என்ற பாலமுருகன் (30) ஓட்டி சென்றார். அப்போது ஆலங்குடி அருகே வம்பன் என்ற இடத்தில் வரும்போது அந்தவழியாக புதுக்கோட்டையில் இருந்து ரெகுநாதபும் சென்ற அரசு பேருந்து லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பக்கம் அம்ளம்போல் நொறுங்கியது.

இதில் டிரைவர் விக்கி என்ற பாலமுருகன், மணப்பாறையை சேர்ந்த மதியழகன் (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆட்டோவில் வந்த 7 பேர், பஸ்சில் வந்த கண்டக்டர் உள்பட 5 பேர் என 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 3 ஜல்லிக்கட்டு காளைகளும் இறந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு சென்று திரும்பிய 3 ஜல்லிக்கட்டு காளைகள் விபத்தில் பலியான சம்பவம் மாடுபிடி வீரர்கள் மற்றும் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



Tags : jallikattu ,Pudukottai , Alangudi: 2 people were killed in an accident near Pudukottai where a government bus carrying jallikattu bulls collided with a load auto. This
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை