சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தலைமை காவலர் உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த சீலா ஜெபராணி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமா பிரபாவை பார்க்க சென்றபோது விபத்து ஏற்பட்டது.