×

அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடியை சந்திக்க தயார்: சசிகலா பரபரப்பு பேச்சு

சென்னை: அதிமுகவை ஒருங்கிணைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தயார் என்று சசிகலா கூறினார். சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை சசிகலா நேற்று கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை இணைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா என கேட்கிறீர்கள். தொடக்கத்தில் இருந்தே எனது யுக்தியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இதற்கு மேல் வெளியே சொல்லக் கூடாது. நடந்துவிடும். எங்கள் கட்சிக்காரர்களை நான் சந்திப்பதில் என்ன இருக்கிறது? உங்களிடம் சொல்லிவிட்டு தான் செய்வேன். அதிமுகவை ஒன்றிணைக்கும் வகையில் நிச்சயம் செயல்படுவேன். ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரை விரைவில் சந்திக்கவும் தயார் என்றார்.

Tags : Edappadi ,AIADMK ,Sasikala , Ready to meet Edappadi to unite AIADMK: Sasikala sensational speech
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...