தேனி: தேனி பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் கலவரம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை நடந்த பொங்கல் விழாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏர்பட்டத்தையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக இரு சமூகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.