குளித்தலை: ஆர்.டி. மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் சிவகுமாரின் பார்வை பறிபோனது. காளை முட்டியதில் பள்ளபட்டியை சேர்ந்த இளைஞர் சிவகுமாரின் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது. இளைஞர் சிவகுமார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாடுபிடி வீரர் சிவகுமார் சோர்வடைந்து தடுப்பு கம்பி வேலி ஓரமாக அமர்ந்து இருந்த போது காளை குத்தியது.