கட்டாக்: மகர மேளா விழா ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது படாம்பா-கோபிநாத்பூர் பாலத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த சமயத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் 45 வயதான அஞ்சனா ஸ்வைன் என்பவர் பலியானார். குழந்தைகள், பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.